Monday, October 5, 2009
நீண்டதொரு இசையின் பயணம்
Thursday, October 1, 2009
மேலும் ஒரு சம்பவமாக இதை எண்ண முடியவில்லை . அசோக் நகரில் கடந்த வாரம் அனந்தலட்சுமி என்ற பெண்ணும் அவரது மகனும் பூட்டிய வீட்டினுள் கொலை செய்யப்பட்டு கிடந்த செய்தி பற்றி முதலில் படித்த போதே , உள்ளுக்குள் இது மேலும் ஒரு கள்ள காதல் விவகாரமாக இருக்க கூடும் என தோன்றியது . இப்போது விசாரணையில் தெரிய வரும் சேதிகள் அதை நோக்கியே செல்கின்றன .
பெண்ணகளின் பாலியல் சார்ந்த பிறழ்வுகளுக்கு காரணம் கண்டரிய வேண்டிய மிக முக்கியமான தருணத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது . ஆண் வர்க்கம் மீண்டும் மீண்டும் தங்களது பாலியல் வக்கிராங்களுக்குபகடை காயாகவே பெண்களை உருட்டும் அவல நிலை தொடர்கிறது .ஆண் பெண் குடும்ப உறவின் சிக்கல்கள் பெரும்பாலான நேரங்களில் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை அடிபடையாக கொண்டே கட்டமைக்கப்படுகின்றன .இந்த எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் நம் வீட்டுக்குளேயே சுதந்திரமாக நாம் அனுமதிக்கும் சீரியல்கள் வாயிலாக ஆண் பெண் உறவு பற்றி நீதி போதனைகள் மதியம் ஆரம்பித்து இரவு வரை நியாயப்படுத்த படுகின்றன .இதை தாண்டி இன்றைய தொழில் நுட்ப புரட்சிகளான செல் போன் , இணையம் எவ்வித பாரபட்சமுமின்றி தங்கள் சேவைகளை வாரி வழங்குகின்றன .முடிவு இதுமாதிரியான அபத்தமான உயரிழப்புகளில் சென்று முடிகிறது